
காணாமல் போவதுமேனோ?
கண்ணே இனி தாமதமேனோ?
இவ்வுலகினை மறந்து நிற்கும்
இந்நிலையினை என்ன சொல்வேன்?
அவ்வுலகினில் ஆவி சென்று
அந்நிலவினில் உன்நிழலைக் கண்டு வியக்கிறேன்!
அந்நிழலினை நிஜமாக்கத் தவிக்கிறேன்!
என்னுயிரினில் கலந்துவிட்ட
உன்னுருவம் போலொரு பிம்பம்
என்னருந்துயர் நீங்கப் பிறந்த
நல்மலரிடை மலர்ந்த பெண்ணே!
(என்னைக்)
காணாமல் போவதுமேனோ?
கண்ணே இனி தாமதமேனோ?
வீணாக வம்புகள் பேசி
இந்நாளும் போவதுமேனோ?
கண்ணுக்குள்ளே காதல் காட்டுகிறேன்
அதைக் கண்டும் காணாமல் போவதுமேன்? (இந்தப்)
பெண்ணுக்குள்ளே காதல் தோன்றாதோ? இல்லை
மண்ணுக்குள்ளே புதைந்து போனதோ?
(என்னைக்)
காணாமல் போவதுமேனோ?
கண்ணே இனி தாமதமேனோ?
வீணாக வம்புகள் பேசி
இந்நாளும் போவதுமேனோ?
- Sai
No comments:
Post a Comment