Saturday, January 25, 2020

அவள் உருகக்கண்டு!


Image result for couple abstract painting


வண்ணமகள் இதழ்ச்சிரிப்பில்
    மன்னனவன் மையலுற்று
உண்ணும் உணவு மறுத்தான்
    உறங்குதல் அறவே மறந்தான்

திண்ணமுற்றான் தேடினான்
    திருமகள்கரம் பற்ற
கண்ணிலடங்கா கற்சிலையழகைக் 
    கண்டான் இன்று கவியுமானான்

எண்ணமெல்லாம் அவளைச்சுற்றி
    இன்னிசையாய் மாறியதோ!
மண்ணும் விண்ணும்கூட அவள்
    கண்ணசைவில் கரைந்ததோ!

வெண்ணிலா முகம்கண்டு
    வீசுதென்றல் வருடக்கண்டு
பண்ணறியா பாமரனவன்
    பாடினான் அவள் உருகக்கண்டு! 

                   - Sai

No comments:

Post a Comment