வண்ணமகள் இதழ்ச்சிரிப்பில்
மன்னனவன் மையலுற்று
உண்ணும் உணவு மறுத்தான்
உறங்குதல் அறவே மறந்தான்
திண்ணமுற்றான் தேடினான்
திருமகள்கரம் பற்ற
கண்ணிலடங்கா கற்சிலையழகைக்
கண்டான் இன்று கவியுமானான்
எண்ணமெல்லாம் அவளைச்சுற்றி
இன்னிசையாய் மாறியதோ!
மண்ணும் விண்ணும்கூட அவள்
கண்ணசைவில் கரைந்ததோ!
வெண்ணிலா முகம்கண்டு
வீசுதென்றல் வருடக்கண்டு
பண்ணறியா பாமரனவன்
பாடினான் அவள் உருகக்கண்டு!
- Sai
No comments:
Post a Comment