என்மனம் அலைபாயுதின்று
கண்மணி காதலாசை தந்ததும் - என் மனம்
மன்மத ராகம் பாடியதும்
கண்கள் மலர்ந்திட உடலும் சிலிர்த்திட
பஞ்சணையில் புது கலைதனை கற்றிட - என் மனம்
பன்னெடுங்காலமாய் நிதமொரு யுகமாய்
நித்திரை கொள்ளாது நினைந்தேன் உனை!
வண்ணமலர் சூடிடும் எழில்முகம்
கண்டிட கொண்டிட கனியிதழ் சுவைத்திட
கன்னக்குழியில் ஒரு முத்தமும் தந்திட - என் மனம்
- Sai
No comments:
Post a Comment